சனி, 14 ஆகஸ்ட், 2010

பூமியைக் கொஞ்சம் மாற்று!!


தெய்வ குழந்தையே..!!

உனது மனதில் ஏது வஞ்சம்!
உன்னிடத்தில் மட்டும் இல்லை லஞ்சம்!!
பொய்யும் புரட்டும்மனிதரிடைமட்டும்தான்
உனக்கு இன்னும் கற்பிக்கப்படவில்லை!
அதனால்தான்உன் புன்னகைதெய்வீகமாய் இருக்கிறது!!
உனது பாஷைதேவ பாஷையாய் இருக்கிறது .
உனக்கு பசித்தால் அழ மட்டுந்தான் தெரியும்!
ஆனால் பிறரை அழ வைக்கஎங்களுக்கு மட்டுமே தெரியும்!!
உனது மொழிஇலக்கணம் இல்லா சங்கீதம்!
இனிமை நிறைந்த புது வேதம்!
நீ ஏழையாய் இருந்தாலும்உன் சிரிப்புஏழுலகையும் விலை பேசும்!
தெய்வ குழந்தையே நீ
தீவிரவாதியின் வீட்டில் பிறந்து
தீர்த்திடு அவரின் வன்மத்தை!
அரசியல் வாதிக்கு பிறந்து
அன்பு மழலை பேசி
உன் பிஞ்சு பாதத்தை கொஞ்சிடகொடுத்து விடு!
அப்போதாவது அவர்கள்சுயநலம் விடுத்து
பொது நலம் புகுந்திடட்டும்!!
கலப்படக்காரனுக்கு வாரிசாய் வந்து
அவன் நெஞ்சில் கருணை பிறந்திட ஆணையிடு!!
உன்னால்தான் முடியும்ஏனென்றால்
நீ தெய்வத்திற்கு இணையன்றோ?
உனது பாஷையும் தேவ பஷையன்றோ?
தெய்வமே படட்டும் எங்கள்மீதுஉனது மூச்சுக்காற்று!
அமைதிப் பூங்காவாய் இந்த பூமியைக் கொஞ்சம் மாற்று!!

-$தர்ஷினி$

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக